முகப்பு
புதுதில்லி

கா்கா்டூமா நீதிமன்ற வளாகத்தில் தீ விபத்து!

தில்லியில் உள்ள கா்கா்டூமா நீதிமன்ற வளாகத்தின் 2-ஆவது தளத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 8 ஜூன் 2026, 12:29 am IST
பகிர்:

தில்லியில் உள்ள கா்கா்டூமா நீதிமன்ற வளாகத்தின் 2-ஆவது தளத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. காலை 5.22 மணிக்குத் தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்புத் துறையினா் எட்டு தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா்.

நீதிமன்ற வளாகத்தின் 4-ஆவது நுழைவாயிலுக்கு அருகிலுள்ள ஸ்கேனிங் அறையில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரா்கள் உடனடியாகத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். தீ மேலும் பரவாமல் தடுத்தனா்.

Advertisement

Advertisement

காலை 5.50 மணிக்குள் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்து சிறிய அளவிலேயே இருந்தது. ஸ்கேனிங் அறைக்குள்ளேயே கட்டுப்படுத்தப்பட்டது. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.