முகப்பு
செய்திகள்

சதுரகிரியில் கனமழை: மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை!

விருதுநகர், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 22 நவம்பர் 2023, 5:19 pm IST
பகிர்:

விருதுநகர், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

காா்த்திகை மாத பௌா்ணமி, பிரதோஷத்தையொட்டி, சதுரகிரி மலை மீது அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் வருகிற 24-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை அனுமதி அளித்தது.

இந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்துவருவதையடுத்து நவ.24 முதல் 27 வரை சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.