வள்ளிமலையில் பிரம்மோற்சவ தேர் திருவிழா கொடியேற்றம்!
வள்ளிமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று மலைக்கோவிலில் உள்ள பிரம்மாண்ட கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
முன்னதாக இன்று காலை விசேஷ பூஜை செய்யப்பட்டு, வேதங்கள் முழங்க மலைமேல் உள்ள கொடிமரத்தில் பிரம்மோற்சவ தேர் திருவிழா கொடி ஏற்றப்பட்டது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை பிரம்மோற்சவ தேர் திருவிழா 4 நாள்கள் நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement
இதில் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் கோவில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு கோவில் நிர்வாகிகள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.