முகப்பு
செய்திகள்

வள்ளிமலையில் பிரம்மோற்சவ தேர் திருவிழா கொடியேற்றம்!

வள்ளிமலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 14 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று மலைக்கோவிலில் உள்ள பிரம்மாண்ட கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

முன்னதாக இன்று காலை விசேஷ பூஜை செய்யப்பட்டு, வேதங்கள் முழங்க மலைமேல் உள்ள கொடிமரத்தில் பிரம்மோற்சவ தேர் திருவிழா கொடி ஏற்றப்பட்டது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை பிரம்மோற்சவ தேர் திருவிழா 4 நாள்கள் நடைபெற உள்ளது.

இதில் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் கோவில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு கோவில் நிர்வாகிகள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.