மதுரை வீரகாளியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா!
மதுரை வீரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்..
மதுரை வீரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பறவை காவடி, தேர் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரத்தில் மிகப் பழமையான ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் உள்ளது, இந்த கோவிலின் 74 ஆவது ஆண்டு வைகாசி உற்சவ விழா தொடங்கி நடைபெற்றுவருகிறது. காப்பும் கட்டும் நிகழ்வுடன் தொடங்கிய இவ்விழாவில் நாள்தோறும் அம்மனுக்கு தினமும் காலை, மாலை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது,
இந்நிலையில், விழாவின் சிகர நிகழ்வாக இன்று காலை 5 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றிலிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயிலுக்கு அலகு குத்தியும், பால் குடம் எடுத்தும், வேல் குத்தியும், பறவை காவடி எடுத்தபடியும் வைகை ஆற்றிலிருந்து ஜெய்ஹிந்த் புரம் வரை ஊர்வலமாகச் சென்றனர்.
Advertisement
Advertisement
இதில் 10,000 மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், 5,000 மேற்பட்டோர் பக்தர்கள் வேல் குத்தியபடியும், 50க்கும் மேற்பட்ட 5 அடுக்கு, 3 அடுக்கு என 50 அடி முதல் 30 அடி வரை பறவை காவடி, தேர் காவடி, பால்காவடி, எடுத்தும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினார்கள், 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாகச் சென்றதால் மாநகர் சாலைகள் முழுவதிலும் திருவிழாக் கோலம் பூண்டது.
இந்த விழாவினை தொடர்ந்து நாளை ஊர்ப் பொங்கல், அக்னி சட்டி, முளைப்பாரி ஊர்வலம், 3 ஆம் தேதி திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது
Following the Panguni festival at the Madurai Veera-Kaliyamman Temple, thousands of devotees fulfilled their vows by carrying milk pots (*paalkudam*), *Paravai Kavadi*, and *Ther Kavadi*.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.