உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை; 3-வது இடத்துக்கு சறுக்கிய ஆஸ்திரேலியா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்துக்கு சறுக்கியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்துக்கு சறுக்கியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் இருந்தது.
இதையும் படிக்க: ஐசிசியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற ஜெய் ஷா!
Advertisement
Advertisement
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஏற்பட்ட வரலாற்று டெஸ்ட் தோல்வியின் காரணமாக, இந்திய அணி தரவரிசையில் 2-வது இடத்துக்கு சறுக்கியது. ஆஸ்திரேலிய அணி முதலிடத்துக்கு முன்னேறியது. பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்துக்கு சறுக்கியது.
3-வது இடத்துக்கு சறுக்கல்
இலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இலங்கையை 233 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்குப் பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி 61.11 சதவிகித வெற்றிகளுடன் முதலிடத்திலும், 59.26 சதவிகித வெற்றிகளுடன் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இடத்திலும், 57.69 சதவிகித வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் நியூசிலாந்து (54.55 சதவிகித வெற்றிகள்) மற்றும் இலங்கை (50.00 சதவிகித வெற்றிகள்) அணிகள் உள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.