சதர்லேண்ட் 
கிரிக்கெட்

சதர்லேண்ட் சதம்: இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு!

ஆஸி. ஒருநாள் போட்டி: இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெர்த்தில் உள்ள வாகா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் முதலில் பந்துவீசுவதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்| தொலைக்காட்சி பார்த்து கிரிக்கெட் கற்றுக்கொண்டேன்: பும்ரா!

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சொதப்பினாலும் பின் வரிசையில் வந்தவர்களின் சிறப்பான ஆட்டத்தால், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக அனபெல் சதர்லேண்ட் 110 ரன்களும், கேப்டன் டாஹ்லியா மெக்ராத் 56 ரன்களும், ஆஸ்லே கார்ட்னெர் 50 ரன்களும் விளாசினர்.

இந்திய அணித் தரப்பில் அருந்ததி ரெட்டி 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இந்திய அணி 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

இதையும் படியுங்கள்|ஓவியர், பாடகர், எழுத்தாளர்..! சச்சினின் தூக்கத்தை கெடுத்த பௌலரின் புதிய பரிணாமம்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம் - வெள்ளி விலை!

உத்திரமேரூர் ஸ்ரீ குழம்பேஸ்வரர் கோயில் குடமுழுக்கு! யாகசாலை பூஜை தொடங்கியது!

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.4% ஆக உயர்த்தி கணிப்பு: ஆர்பிஐ

கோலாகலமாக தொடங்கிய டி20 உலகக் கோப்பை.. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சு!

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த யானைக்குட்டி! மீட்கும்வரைக் காத்திருந்த தாய் யானை!

SCROLL FOR NEXT