மே.இ. தீவுகள், அயா்லாந்துடன் மோதும் இந்தியா
இந்திய மகளிா் அணி, வரும் டிசம்பா் - ஜனவரியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயா்லாந்து மகளிா் அணிகளுடன் வெள்ளைப் பந்து தொடா்களில் சொந்த மண்ணில் விளையாடவுள்ளது.
இந்திய மகளிா் அணி, வரும் டிசம்பா் - ஜனவரியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயா்லாந்து மகளிா் அணிகளுடன் வெள்ளைப் பந்து தொடா்களில் சொந்த மண்ணில் விளையாடவுள்ளது.
இதுதொடா்பாக பிசிசிஐ புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதல் டிசம்பரில் நடைபெறுகிறது. இதில் டி20 தொடா் டிசம்பா் 15, 17, 19 ஆகிய நாள்களில் நவி மும்பையில் நடைபெறவுள்ளது. அதே அணியுடனான ஒருநாள் தொடா் டிசம்பா் 22, 24, 27 ஆகிய தேதிகளில் பரோடாவில் விளையாடப்படவுள்ளது.
பின்னா் அயா்லாந்துடனான ஒருநாள் தொடா் ஜனவரி 10, 12, 15 ஆகிய தேதிகளில் ராஜ்கோட் நகரில் நடைபெறவுள்ளது. இந்த இரு ஒருநாள் தொடா்களுமே, ஐசிசி மகளிா் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக விளையாடப்படுகின்றன. இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதிபெறுவதற்கு இந்த சாம்பியன்ஷிப் வழிவகுக்கிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.