முகப்பு
கிரிக்கெட்

ரிஷப் பந்த்தின் முதல் இன்னிங்ஸ்தான் ஆச்சரியமளித்தது: ஆஸி. தலைமைப் பயிற்சியாளர்

ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடியது தனக்கு ஆச்சரியளிக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

Updated On : 4 ஜனவரி 2025, 3:44 pm IST
ரிஷப் பந்த் - படம் | AP
பகிர்:

ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடியது தனக்கு ஆச்சரியளிக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 4 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையும் படிக்க: 46 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா..!

Advertisement

Advertisement

எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை

4 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 33 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு - படம்| ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

இந்த நிலையில், ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடியது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை எனவும், முதல் இன்னிங்ஸில் அவர் பொறுமையாக விளையாடியதே தனக்கு மிகவும் ஆச்சரியமளித்ததாக ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரிஷப் பந்த் விளையாடிய விதம் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. உண்மையில், அவர் முதல் இன்னிங்ஸில் மிகவும் பொறுமையாக விளையாடியதே எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் திறன் ரிஷப் பந்த்துக்கு இருக்கிறது என்றார்.

இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி அதிவேகமாக அரைசதம் அடித்த ரிஷப் பந்த், முதல் இன்னிங்ஸில் 98 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments