ஜஸ்பிரீத் பும்ரா (கோப்புப் படம்) படம் | ஐசிசி
கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து விலகும் பும்ரா?

இங்கிலாந்து உடனான தொடரிலிருந்து இந்திய வீரர் பும்ரா விலகுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

இங்கிலாந்து உடனான தொடரிலிருந்து இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா விலகுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுகு தசைப் பிடிப்பு காரணமாக பார்டர்- கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பும்ராவினால் பந்துவீச முடியவில்லை. அதனால் இந்திய அணி மோசமாக தோல்வியுற்றது.

3-1 என ஆஸி. அணி கோப்பையை வென்றது. இருப்பினும் 32 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா தொடர் நாயகன் விருது பெற்றார்.

இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து உடனான வெள்ளைப் பந்து கிரிக்கெட் (ஒருநாள், டி20) போட்டியில் விளையாடவிருக்கிறது.

இருதரப்பு தொடரைவிட சாம்பியன்ஸ் டிராபி முக்கியம்

5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் விளையாட இங்கிலாந்து அணி இந்தியா வரவிருக்கிறது. முதல் போட்டி ஜன.22இல் தொடங்குகிறது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்காக பும்ரா இங்கிலாந்து தொடரில் இருந்து விலகுவதாக பிசிசிஐ கவனம் செலுத்தி வருகிறது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பிப்.19ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பிப்.20ஆம் தேதி இந்திய அணி வங்கதேசத்துடன் மோதுகிறது.

30 வயதாகும் பும்ரா பிஜிடி தொடரில் 150 ஓவர்களுக்கும் அதிகமாக பந்து வீசியுள்ளார். வேலைப்பழு அதிகமானதாலயே அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதென வர்ணனையாளர்கள் கூறினார்கள்.

பும்ராவின் காயம் எப்படி இருக்கிறதென இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பும்ராவின் நிலைமை என்ன?

கிரேட் 1 காயம் எனில் குறைந்தபட்சம் 2 அல்லது 3 வாரங்கள் தேவைப்படும். கிரேடு 2 காயம் எனில் அது குணமாக 6 வாரங்களும் கிரேடு 3 எனில் குறைந்தபட்சம் 3 மாதங்கள் தேவைப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டி20 தொடரில் பும்ரா விளையாடமாட்டார். ஏனெனில் இந்த வருடம் டி20 உலகக் கோப்பை இல்லை. ஆனால், சாம்பியன்ஸ் டிராபி இருப்பதால் இங்கிலாந்துடனன 3இல் 2 ஒருநாள் போட்டிகளாவது பும்ரா விளையாட வேண்டும்.

பும்ராவின் காயம் எந்த கிரேடில் இருப்பதென கண்டறிந்த பிறகுதான் அவர் இங்கிலாந்து உடனான தொடரில் பங்கேற்பது உறுதி செய்யப்படும். பிப்.12ஆம் தேதி கடைசி ஒருநாள் போட்டியிலாவது பும்ரா விளையாடுவாரா என அவரது உடல்நிலை பரிசோதைக்குப் பிறகே தெரியவருமென பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் ராணுவத் தளபதி நூலை மேற்கோள்காட்ட அனுமதிக்காதது ஏன்? ராகுல் விளக்கம்

10 மாநிலங்களில் தேடுதல் நடத்தி சைபா் குற்றவாளி கைது-சி.பி.ஐ நடவடிக்கை

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு

பெண்ணையாறு விவகாரம்-தீா்வு காண மத்திய அரசு தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மூன்று நாள்கள் பயணமாக அமெரிக்கா சென்றாா் ஜெய்சங்கா்: அமைச்சா்களுடன் முக்கிய சனை

SCROLL FOR NEXT