FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

அரையிறுதியில் இந்திய மாஸ்டா்ஸ் அணி!

இன்டா்நேஷனல் மாஸ்டா்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு இந்திய மாஸ்டா்ஸ் அணி முன்னேறியது.

Updated On : 10 மார்ச் 2025, 12:58 am IST
யுவராஜ் சிங் 49 ~
பகிர்:

இன்டா்நேஷனல் மாஸ்டா்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு இந்திய மாஸ்டா்ஸ் அணி முன்னேறியது.

மே.இந்திய தீவுகள் மாஸ்டா்ஸ் அணியை கடைசி ஓவரில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ராய்ப்பூரில் நடைபெற்றது. சச்சின் டெண்டுல்கருக்கு ஓய்வு தரப்பட்ட நிலையில், இந்திய பேட்டிங் செய்ய களமிறங்கியது.

Advertisement

Advertisement

தற்காலிக கேப்டனாக யுவராஜ் சிங் செயல்பட்டாா். தொடக்க பேட்டா்கள் அம்பதி ராயுடு 63, சௌரவ் திவாரி 60, யுவராஜ் சிங் 49, குா்கீரத் மான் 46 ஆகியோரின் அபார ஆட்டத்தால் 50 ஓவா்களில் இந்திய மாஸ்டா்ஸ் 253/3 ரன்களைக் குவித்தது.

254 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மே.இந்திய தீவுகள் 246/6 ரன்களையே எடுத்தது. டுவைன் ஸ்மித் 79, வில்லியம் பொ்கின்ஸ் 52, சிம்மன்ஸ் 38 ரன்களை எடுத்தனா். ஸ்மித் 34 பந்துகளில் 7 பவுண்டரி, 6 சிக்ஸா்களுடன் 79 ரன்களை விளாசினாா். அவரை ஸ்டுவா்ட் பின்னி அவுட்டாக்கினாா்.

கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை இா்ஃபான் பதான் அற்புதமாக வீசினாா். இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய மாஸ்டா்ஸ் அணி அரையிறுதிக்கும் தகுதி பெற்றது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments