சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை!
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று (அக்டோபர் 29) தொடங்கியது.
இன்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது. போட்டியின் இடையே மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்திய அணி 9.4 ஓவர்களில் 97 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. சூர்யகுமார் யாதவ் 39 ரன்களுடனும், ஷுப்மன் கில் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
Advertisement
Advertisement
நீண்ட நேரத்திற்கும் மேலாக மழை நிற்காததால் இரு அணிகளுக்கும் இடையிலான இந்த முதல் டி20 போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை
இன்றையப் போட்டியில் 39 ரன்கள் எடுத்து களத்திலிருந்த சூர்யகுமார் யாதவ், இரண்டு சிக்ஸர்கள் விளாசியிருந்தார். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 150 சிக்ஸர்கள் விளாசி அவர் சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் 150+ சிக்ஸர்கள் விளாசியவர்கள்
ரோஹித் சர்மா - 205 சிக்ஸர்கள்
முகமது வசீம் - 187 சிக்ஸர்கள்
மார்ட்டின் கப்டில் - 173 சிக்ஸர்கள்
ஜோஸ் பட்லர் - 172 சிக்ஸர்கள்
சூர்யகுமார் யாதவ் - 150* சிக்ஸர்கள்
Indian team captain Suryakumar Yadav has set a new record in T20 Internationals.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.