முகப்பு
கிரிக்கெட்

நம்.4 இடத்தில் விளையாடியது தன்னம்பிக்கை அளித்தது: சமீர் ரிஸ்வி

ஆட்ட நாயகன் விருது வென்ற தில்லி கேபிடல்ஸ் அணியின் சமீர் ரிஸ்வி பேட்டி குறித்து...

Updated On : 2 ஏப்ரல், 2026 at 7:43 AM
அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் சமீர் ரிஸ்வி. - படம்: ஏபி
பகிர்:

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இளம் வீரர் சமீர் ரிஸ்வி 70 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.

முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய தில்லி அணி 17.1 ஓவர்களில் 145/4 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக சிஎஸ்கே அணியில் அதிக விலைக்கு வாங்கபட்ட சமீர் ரிஸ்வி கடந்த ஏலத்தில் தில்லி கேபிடல்ஸ் அணிக்கு மாறினார். கடந்த போட்டியில் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய சமீர் ரிஸ்வி அவரது மிகச்சிறந்த விளையாட்டை விளையாடி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான ஆட்ட நாயகன் விருது வென்ற பிறகு சமீர் ரிஸ்வி பேசியிருப்பதாவது:

போட்டிக்கு முன்னதாக, பயிற்சியாளர்கள் என்னிடம், ‘நீ நம்.4ல் களமிறங்கப்போகிறாய். உன்னை நம்புகிறோம். நீ உனது இயல்பான ஆட்டத்தை விளையாடு’ எனக் கூறினார்கள்.

நான் உ.பி. அல்லது உபிடி20 லீக்கில் நம்.4 இடத்தில் விளையாடினேன். அதே மாதிரியான இடம் ஐபிஎல் போட்டிகளில் கிடைப்பது எனக்கு தன்னம்பிக்கையை அளித்தது.

இது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. என்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆட பயிற்சியாளர்கள் எனக்கு சுதந்திரம் அளித்தார்கள். அதனால், கிடைத்த இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டேன்.

ஐபிஎல் போட்டிகளில் பெரிதாக விளையாட வில்லை. இருப்பினும் தொடர்ச்சியாக நன்றாக விளையாட முயல்வேன். இந்த இன்னிங்ஸை மறந்துவிட்டு அடுத்த போட்டிக்குத் தயார்குவேன் என்றார்.

summary

Batting at number four gave me confidence: says DC batter Rizvi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.