முகப்பு
கிரிக்கெட்

சஞ்சு சாம்சன் பேட்டிங் குறித்து கவலையில்லை: சிஎஸ்கே பயிற்சியாளர்

சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் பற்றி பேசியதாவது...

Updated On : 4 ஏப்ரல் 2026, 1:26 pm IST
ஆட்டமிழந்து வெளியேறிய சஞ்சு சாம்சன். - படம்: ஏபி
பகிர்:

சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சனின் பேட்டிங் குறித்து கவலை இல்லை எனக் கூறியுள்ளார்.

சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சிஎஸ்கே அணிக்கு மினி ஏலத்திற்கு முன்பாக மாறினார். சிஎஸ்கேவில் இருந்த ஜடேஜா, சாம் கரண் ராஜஸ்தானுக்கு அணிக்கு மாறினார்கள்.

சஞ்சு சாம்சன் தனது முதல் போட்டியில் 6 ரன்களுக்கும் இரண்டாவது போட்டியில் 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார்.

Advertisement

Advertisement

டி20 உலகக் கோப்பையில் இருந்த ஃபார்மை தற்போது தக்க வைக்க சஞ்சு சாம்சன் போராடி வருகிறார். இது குறித்து சிஎஸ்கேவின் பயிற்சியாளர் கூறியிருப்பதாவது:

சஞ்சு சாம்சன் நன்றாக பயிற்சி செய்கிறார். அவர் விளையாட ஆரம்பித்தால் போட்டிகளை வென்று கொடுப்பவராக மாறுவார். ஆட்ட நாயகனாகவும் திகழக் கூடியவர். அதனால், 2 இன்னிங்ஸை வைத்து அவரது பேட்டிங் கவலைக்கிடமாக இருக்கிறது எனக் கூற முடியாது என்றார்.

summary

Csk Coach Fleming saying two innings are not a cause for concern of Sanju Samson.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.