FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஆவேஷ் கானும் 1 ரன் த்ரில் வெற்றிகளும்..! பேட்டில் பந்து படாமலேயே 3ஆவது முறையாக வென்ற சுவாரசியம்!

த்ரில் வெற்றியில் லக்னௌ வீரர் ஆவேஷ் கானின் பங்களிப்பு குறித்து...

Updated On : 10 ஏப்ரல் 2026, 11:53 am IST
வெற்றிக் களிப்பில் ஆவேஷ் கான். - படம்: ஐபிஎல்
பகிர்:

ஐபிஎல் வரலாற்றில் ஆவேஷ் கான் மூன்றாவது முறையாக 1 ரன் த்ரில் வெற்றியில் பங்கேற்று கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டி செய்த கேகேஆர் அணி 20 ஓவர்களில் 181/4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய லக்னௌ அணி 20 ஓவர்களில் 182/7 ரன்கள் எடுத்து வென்றது.

கடைசி பந்தில் முகுல் சௌதரி பந்தை அடிக்காமல் விட்டுவிட கொல்கத்தா அணியின் கீப்பர் அதைச் சரியாக பிடித்து ஸ்டம்பில் அடிக்கும் முன்பாக, ஆவேஷ் கான் 1 ரன்னை எடுத்து முடிப்பார். இதேபோல அவர் 1 ரன் வித்தியாசத்தில் மூன்றாவது முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் ஆவேஷ் கான் 3 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்தார். மற்ற போட்டிகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் வெற்றியில் பங்களித்திருந்தார்.

முன்னதாக ஆர்சிபிக்கு எதிராக, 2023ல் கடைசி பந்தில் ஹர்ஷல் படேல் பந்துவீச, அந்தப் பந்தை அடிக்காமல் விட்ட ஆவேஷ் கான் 1 ரன் ஓடி வெற்றிக்கு வித்திடுவார். அந்தப் போட்டியில் வெற்றிக்குப் பிறகு, ஹெல்மட்டை தூக்கி வீசுவார்.

பின்னர், 2024ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை செவ்வாய்க்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

இந்தப் போட்டியில் 9வது விக்கெட்டாக 17.4ஆவது ஓவரில் களமிறங்கிய ஆவேஷ் கான் ஒரு பந்துகூட விளையாடாமல் வெற்றிக்குக் காரணமாக அமைந்தார்.

summary

Avesh Khan and his 1 run win in ipl history will continue third time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments