ஆவேஷ் கானும் 1 ரன் த்ரில் வெற்றிகளும்..! பேட்டில் பந்து படாமலேயே 3ஆவது முறையாக வென்ற சுவாரசியம்!
த்ரில் வெற்றியில் லக்னௌ வீரர் ஆவேஷ் கானின் பங்களிப்பு குறித்து...
ஐபிஎல் வரலாற்றில் ஆவேஷ் கான் மூன்றாவது முறையாக 1 ரன் த்ரில் வெற்றியில் பங்கேற்று கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டி செய்த கேகேஆர் அணி 20 ஓவர்களில் 181/4 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய லக்னௌ அணி 20 ஓவர்களில் 182/7 ரன்கள் எடுத்து வென்றது.
கடைசி பந்தில் முகுல் சௌதரி பந்தை அடிக்காமல் விட்டுவிட கொல்கத்தா அணியின் கீப்பர் அதைச் சரியாக பிடித்து ஸ்டம்பில் அடிக்கும் முன்பாக, ஆவேஷ் கான் 1 ரன்னை எடுத்து முடிப்பார். இதேபோல அவர் 1 ரன் வித்தியாசத்தில் மூன்றாவது முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
முன்னதாக ஆர்சிபிக்கு எதிராக, 2023ல் கடைசி பந்தில் ஹர்ஷல் படேல் பந்துவீச, அந்தப் பந்தை அடிக்காமல் விட்ட ஆவேஷ் கான் 1 ரன் ஓடி வெற்றிக்கு வித்திடுவார். அந்தப் போட்டியில் வெற்றிக்குப் பிறகு, ஹெல்மட்டை தூக்கி வீசுவார்.
பின்னர், 2024ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை செவ்வாய்க்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது.
இந்தப் போட்டியில் 9வது விக்கெட்டாக 17.4ஆவது ஓவரில் களமிறங்கிய ஆவேஷ் கான் ஒரு பந்துகூட விளையாடாமல் வெற்றிக்குக் காரணமாக அமைந்தார்.