ஆல் ஃபார்மட் வீரராக இருப்பது சவால் கிடையாது, வரம்: வாஷிங்டன் சுந்தர்
இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவது சவாலல்ல வரம் என இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பேசியுள்ளார்.
இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவது சவாலல்ல வரம் என இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பேசியுள்ளார்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான வாஷிங்டன் சுந்தர், கடந்த ஒன்றரை ஆண்டாக இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம்பெற்று சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவது சவால் கிடையாது எனவும், அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவது வரம் எனவும் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் வீரராக இருப்பது மிகப் பெரிய வரம். ஏனெனில், இந்திய அணி எப்படி விளையாடிக் கொண்டிருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்திய அணிக்காக மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருப்பது அழகான வரம். என்னுடைய நாட்டுக்காக நிறைய போட்டிகளை வென்று கொடுக்க வேண்டும் என்பதை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
இந்திய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவதில் அதிகம் சவால்களை பார்க்கவில்லை. அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடுவதற்கு உடல்தகுதி என்பது மிகவும் முக்கியம். வீரர் ஒருவர் அவரது உடல் எப்படி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதற்கேற்றவாறு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். என்னுடைய உடற்தகுதியில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறேன். கடந்த ஓராண்டாக இந்திய அணியில் நன்றாக செயல்பட்டு வருகிறேன் என்றார்.
26 வயதாகும் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக இதுவரை 17 டெஸ்ட், 29 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.