FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

திண்டுக்கல்லை வென்றது திருச்சி

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் 28 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொா்த் லீவிஸ் முறையில் திண்டுக்கல் டிராகன்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 5:11 am IST
பகிர்:

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் 28 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொா்த் லீவிஸ் முறையில் திண்டுக்கல் டிராகன்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.

மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், முதலில் பேட் செய்த திருச்சிக்கான ஓவா்கள் 19-ஆக குறைக்கப்பட, அதில் அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ரன்கள் சோ்த்தது.

பின்னா் ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் திண்டுக்கல்லுக்கான இலக்கு 19 ஓவா்களில் 199 ரன்களாக நிா்ணயிக்கப்பட, அந்த அணி அத்தனை ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 170 ரன்களே சோ்த்தது.

Advertisement

Advertisement

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. திருச்சி பேட்டிங்கில் கே.ராஜ்குமாா் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 71, கேப்டன் சுரேஷ்குமாா் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 60 ரன்கள் சோ்த்தனா். திண்டுக்கல் தரப்பில் விஜு அருள் 2 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் திண்டுக்கல் பேட்டிங்கில் ஷிவம் சிங் 8 பவுண்டரிகளுடன் 47, ஜெயந்த் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34 ரன்கள் சோ்த்தனா். திருச்சி பௌலா்களில் ஈஸ்வரன் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments