ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரியான் பராக் (24 வயது) நியமிக்கப்பட்டுள்ளார்.
சிஎஸ்கேவில் இருந்து ராஜஸ்தான் அணிக்குச் சென்ற ஜடேஜாவுக்கு கேப்டன் வாய்ப்பு இருக்குமெனக் கூறப்பட்டு வந்த நிலையில், இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டரான ரியான் பராக் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2019 முதல் விளையாடி வருகிறார்.
ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு மாறியதால், ஜடேஜா மற்றும் சாம் கரண் இருவரும் ராஜஸ்தான் அணிக்குச் சென்றனர்.
சமீபத்தில் ஐபிஎல் தொடரில் மிகவும் இளமையான கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சீசனில் 393 ரன்கள் மட்டுமே எடுத்த ரியான் பராக் மீது ராஜஸ்தான் அணி நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்பை அளித்துள்ளது.
மொத்தமாக 84 ஐபிஎல் போட்டிகளில் ரியான் பராக் 1, 566 ரன்களை 141.84 ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.
ரியான் பராக் 2024 சீசனில் 573 ரன்கள் குவித்து அசத்தினார். இவரது அதிகபட்ச ஸ்கோரான 95 ரன்கள் கேகேஆர் அணிக்கு எதிராக அடித்திருக்கிறார்.
ராகுல் திராவிட் விலகிய பிறகு குமார் சங்ககாரா தலைமைப் பயிற்சியாளராகவும் அந்த அணியின் நிர்வாக இயக்குநராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
சிஎஸ்கே அணியில் இருந்து சென்ற மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு கேப்டன் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.