டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் பாகிஸ்தான் அணி இலங்கையிடம் தோல்வியுற்றது.
இந்தக் காரணத்தினால், அந்நாட்டு ரசிகர்கள் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவையும் அவரது குடும்பத்தையும் தரம்தாழ்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 164/9 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் 166/8 ரன்கள் எடுத்து வென்றது.
ஏற்கெனவே முதல் போட்டி மழையினால் கைவிடவே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குரூப் 2-ல் இங்கிலாந்து முன்னேறியதால், மீதமிருக்கும் ஓரிடத்துக்கு மூன்று அணிகள் போட்டியிடுகின்றன.
குரூப் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியுற்றது அந்த நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தற்போது, முக்கியமான போட்டியிலும் தோல்வியுற்றதால் பாகிஸ்தான் ரசிகர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளார்கள்.
அணியின் கேப்டன் சல்மா அகாவையும் அவரது மகன், மனைவியையும் குறிவைத்து சமூக வலைதளத்தில் மோசமான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார்கள்.
இது குறித்து சல்மான் அகா தனது இன்ஸ்டா பக்கத்தில், “என்னையும் எனது மகனையும் கொச்சைப்படுத்துவதால் உங்களுக்கு உலகக் கோப்பை கிடைக்கப்போவதில்லை பாகிஸ்தான் ரசிகர்களே” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.