FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலக நினைக்கிறாரா மோர்னே மோர்க்கல்?

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து மோர்னே மோர்க்கல் விலக நினைக்கிறாரா என்பது குறித்து...

Updated On : 18 ஜூலை 2026, 9:56 pm IST
கம்பீருடன் மோர்னே மோர்க்கல்
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து மோர்னே மோர்க்கல் விலக விரும்புவதாகக் கூறப்படுகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் தங்களுக்குள் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், ஒருநாள் தொடரின் வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி நாளை (ஜூலை 19) லார்ட்ஸில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து மோர்னே மோர்க்கல் விலக விரும்புவதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

ஆனால், அவரைச் சுற்றி பேசப்பட்டு வருவதாகக் கூறப்படும் இந்த விஷயம் உண்மையில்லை என்பது போன்று மோர்னே மோர்க்கல் பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் தென்னாப்பிரிக்காவில் இருந்து வருகிறேன். தென்னாப்பிரிக்க அணிக்காக 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடியுள்ளேன். என்னுடைய அனுபவம் இந்திய அணிக்கு உதவியாக இருக்கும். தென்னாப்பிரிக்காவில் உள்ள ஆடுகளங்களின் தன்மை குறித்து எனக்கு நன்றாக தெரியும். இந்திய அணி நிர்வாகம் உலகக் கோப்பைக்கான தயாரிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. இந்திய அணிக்கு என்னுடைய பங்களிப்பை வழங்க காத்திருக்கிறேன் என்றார்.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Regarding whether Morne Morkel is considering stepping down from the role of bowling coach for the Indian team...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments