FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

துலீப் கோப்பை: இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டலம் பேட்டிங்!

சென்னையில் நடைபெறும் துலீப் கோப்பை இறுதிப் போட்டி குறித்து...

40 வினாடிகள் முன்பு
துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் இஷான் கிஷன், திலக் வர்மா. - படம்: எக்ஸ் / டிஎன்சிஏ
பகிர்:

சென்னையில் நடைபெறும் துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. 16 ஓவர்களில் 107/1 ரன்கள் எடுத்துள்ளது.

தெற்கு மண்டல அணிக்கு திலக் வர்மா கேப்டனாகவும் கிழக்கு மண்டல அணிக்கு இஷான் கிஷன் கேப்டனாகவும் விளையாடுகிறார்கள்.

தொடக்க வீரர் அபிமன்யூ ஈஸ்வரன் அரைசதம் அடித்து விளையாடி வருகிறார். அரைசதம் அடிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Advertisement

Advertisement

தெற்கு அணியில் முகமது சிராஜ் இருக்கிறார். கிழக்கு அணியில் முகமது ஷமி இருக்கிறார். முதல் விக்கெட்டை ஹைதராபாதின் சாமா மிலிண்ட் எடுத்து அசத்தினார்.

நான்கு நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டிக்கு அனுமதி இலவசம என டிஎன்சிஏ அறிவித்திருந்தது. இந்தப் போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் சேப்பாக்கம் திடலில் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Duleep Trophy final East Zone cricket team selected to batting

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments