FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆசியக் கோப்பை: இந்திய மகளிர் அணி 8-ஆவது முறை சாம்பியன்!

மகளிருக்கான 10-ஆவது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றியது.

14 செப்டம்பர் 2026, 4:18 am IST
பகிர்:

மகளிருக்கான 10-ஆவது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, கோப்பையைக் கைப்பற்றியது.

இறுதி ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் சேர்க்க, இலங்கை 20 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் இழந்து 111 ரன்களே எடுத்தது.

இந்த வெற்றியுடன், போட்டியில் இந்தியா 8-ஆவது முறையாக சாம்பியன் ஆனது. இதற்கு முன், 2004, 2005-06, 2006, 2008, 2012, 2016, 2022 ஆகிய ஆண்டுகளில் இந்தியா வாகை சூடியது.

Advertisement

Advertisement

முன்னதாக இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணியில், ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்தது. ஷஃபாலி 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 68, ஸ்மிருதி 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 59 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 14, ரிச்சா கோஷ் 17, தீப்தி சர்மா 5 ரன்களுக்கு வெளியேற, ஓவர்கள் முடிவில் பாரதி ஃபுல்மாலி 2, ஜி.கமலினி 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கை பெüலர்களில் மிதாலி அயோத்யா, சமரி அத்தபட்டு, சாமுடி பிரபோதா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் இலங்கை இன்னிங்ஸில் இமேஷா துலானி 4, கேப்டன் சமரி அத்தபட்டு 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 36, விஷ்மி குணரத்னே 2 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனர்.

ஹர்ஷிதா சமரவிக்ரமா 9, நீலாக்ஷிகா சில்வா 1 பவுண்டரியுடன் 22, கவிஷா தில்ஹரி 7 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். ஹாசினி பெரெரா 1, மிதாலி அயோத்யா 0, சுகந்திகா குமாரி 1, கெüஷினி நுத்யங்கனா 9 ரன்களுக்கு வீழ்ந்தனர்.

இந்திய பௌலர்களில் ஸ்ரீசரணி 4, தீப்தி சர்மா 3, கிராந்தி கெüட், ஷஃபாலி வர்மா, பிரேமா ராவத் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments