FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இந்திய ஓபன் காலிறுதியில் சாய்னா, சமீர்

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், சமீர் வர்மா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

Updated On : 31 மார்ச் 2017, 12:46 am IST
தாய்லாந்தின் போர்ன்பாவீக்கு எதிரான ஆட்டத்தில் சாய்னா.
பகிர்:

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், சமீர் வர்மா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
தில்லியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் சமீர் வர்மா 21-17, 21-15 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் ஹன் யூவுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.
அதேநேரத்தில் மற்றொரு இந்தியரான ஸ்ரீகாந்த் 7-21, 12-21 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் விக்டர் ஆக்ùஸல்ஸனிடம் தோல்வி கண்டார். இந்தியாவின் செளரவ் வர்மா, சாய் பிரணீத் ஆகியோரும் தங்களின் 2-ஆவது சுற்றில் தோற்று வெளியேறினர்.
மகளிர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் சாய்னா நெவால் 21-14, 21-12 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் போர்ன்பாவீயை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments