FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஐந்தாவது ஒரு நாள் போட்டி: தவானைச் சீண்டிய தென் ஆப்பிரிக்க வீரருக்கு அபராதம்! 

இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் துவக்க வீரர் ஷிகர் தவானைச் சீண்டிய தென் ஆப்பிரிக்க வீரருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

30 ஜனவரி 2024, 5:45 pm IST
பகிர்:

போர்ட் எலிசபெத்: இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் துவக்க வீரர் ஷிகர் தவானைச் சீண்டிய தென் ஆப்பிரிக்க வீரருக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்தியா மற்றும்  தென் ஆப்பிரிக்கா இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, போர்ட் எலிசபெத் நகரில் செவ்வாயன்று நடந்தது. பரபரப்பான இந்த போட்டியில் இந்தியா 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த போட்டியில் சர்வதேச விதிகளை மீறி நடந்து கொண்டதாக, தென் ஆப்ரிக்க வீரர் ககிஸோ ரபாடாவுக்கு ஐ.சி.சி.15 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.

Advertisement

Advertisement

இதுதொடர்பாக ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

செவ்வாயன்று நடந்த போட்டியில் ககிஸோ ரபாடா வீசிய பந்தில் தவான் ஆட்டமிழந்தார். அந்த விக்கெட்டினைக் கொண்டாடும் வகையில் நடந்து கொண்ட ரபாடாவின் செயல்கள் தவானை வம்பிழுக்கும் வண்ணம் இருந்ததாகத் தெரிகிறது. இது கண்டிப்பாக ஐசிசியின் வீரர்களுக்கான நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகும்.

எனவே தென் ஆப்ரிக்க வீரர் ரபாடாவுக்கு ஐந்தாவது ஒரு நாள் போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments