FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அரையிறுதித் தோல்வி: இந்திய ரசிகர்களைக் கிண்டல் செய்யும் வகையில் விடியோ வெளியிட்ட பாலிவுட் ஹீரோ 

உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியுள்ள நிலையில்  இந்திய ரசிகர்களைக் கிண்டல் செய்யும் வகையில் பாலிவுட் ஹீரோ ஒருவர் விடியோ வெளியிட்டுள்ளார். 

Updated On : 12 ஜூலை 2019, 8:19 pm IST
பகிர்:

மும்பை: உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியுள்ள நிலையில்  இந்திய ரசிகர்களைக் கிண்டல் செய்யும் வகையில் பாலிவுட் ஹீரோ ஒருவர் விடியோ வெளியிட்டுள்ளார். 

இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது , அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம், இந்திய அணி போராடித் தோற்றது. உலகக்கோப்பையை வெல்லும் அணி என்று கணிக்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் தோல்வி கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்திய ரசிகர்களைக் கிண்டல் செய்யும் வகையில் பாலிவுட் ஹீரோ ஒருவர் விடியோ வெளியிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

பிரபல பாலிவுட் ஹீரோவான விவேக் ஓபராய் வெள்ளியன்று பதிவிட்டுள்ள ட்வீட்டில், "உலகக்கோப்பை அரைஇறுதிப் போட்டியில் இந்திய அணியின் ரசிகர்களுக்கு இப்படிதான் ஆகி விட்டது" என்ற குறிப்புடன் 'பிராங்' வகை விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில் வெளிநாட்டுப் பெண்மணி ஒருவர் இந்தியர் ஒருவரை கட்டிப்பிடிக்க வருவது போன்று வருகிறார். அந்த இந்தியரும் தன்னைதான் அவர் கட்டிப்பிடிக்க வருகிறார் என்று நினைத்து அந்த பெண்மணியை கட்டி பிடிக்கும் போது, அவர் அந்த இந்தியருக்குப் பின்னால் உள்ள ஒரு வெளிநாட்டு ஆண் அந்த பெண்மணியை கட்டிபிடிக்கிறார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அந்த இந்தியர் அசடு வழிந்தவாறே கடந்து செல்வார் இந்த விடியோவைப் பயன்படுத்தியே இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அவர் கிண்டல் செய்திருக்கிறார் ஓபராய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments