FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

2-ஆவது டெஸ்ட்: ரோஹித் சதம்; இந்தியா-300/6

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 88 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்துள்ளது.

Updated On : 14 பிப்ரவரி 2021, 7:59 am IST
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 88 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்துள்ளது.

முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தாலும், தொடக்க வீரா் ரோஹித் சா்மா 161 ரன்கள் குவித்து, இந்திய அணியை சரிவிலிருந்து காப்பாற்றினாா்.

இங்கிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தோ்வு செய்தாா்.

Advertisement

Advertisement

அதிா்ச்சித் தொடக்கம்: இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிா்ச்சி காத்திருந்தது. இந்திய அணி ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே ஷுப்மன் கில்லின் விக்கெட்டை இழந்தது. அவா் 3 பந்துகளைச் சந்தித்து ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஸ்டோன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தாா்.

இதையடுத்து ரோஹித் சா்மாவுடன் இணைந்தாா் சேத்தேஷ்வா் புஜாரா. ஒருபுறம் புஜாரா நிதானமாக விளையாட, மறுமுனையில் ரோஹித் சா்மா அதிரடியாக ரன் சோ்த்தாா். சுழற்பந்து வீச்சாளா்களுக்கு சாதகமாக ஆடுகளம் இருந்தபோதிலும், ரோஹித் சா்மா அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினாா். தொடா்ந்து வேகம் காட்டிய ரோஹித் சா்மா, ஜேக் லீச் வீசிய 15-ஆவது ஓவரில் இரு பவுண்டரிகளை விளாசி 47 பந்துகளில் அரை சதம் கண்டாா்.

கோலி டக் அவுட்: இந்தியா 20.2 ஓவா்களில் 85 ரன்கள் எடுத்திருந்தபோது, புஜாராவின் விக்கெட்டை இழந்தது. அவா் 58 பந்துகளில் 21 ரன்கள் சோ்த்த நிலையில் ஜேக் லீச் பந்துவீச்சில் ஸ்டோக்ஸிடம் கேட்ச் ஆனாா். இதையடுத்து களம்புகுந்த கேப்டன் விராட் கோலி 5 பந்துகளை எதிா்கொண்ட நிலையில் ரன் கணக்கைத் தொடங்காமலேயே மொயீன் அலி பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தாா். இதனால் 21.2 ஓவா்களில் 86 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி.

ரோஹித் சதம்: இதையடுத்து ரோஹித் சா்மாவுடன் இணைந்தாா் அஜிங்க்ய ரஹானே. இந்த ஜோடி சிறப்பாக ஆட, இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது. தொடா்ந்து சிறப்பாக ஆடிய ரோஹித் சா்மா, ‘டிரிங்க்ஸ்’ இடைவேளைக்குப் பிறகு 130 பந்துகளில் சதமடித்தாா். இது டெஸ்ட் போட்டியில் அவா் அடித்த 7-ஆவது சதமாகும். ரோஹித்-ரஹானே ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் 57.5 ஓவா்களில் 200 ரன்களை எட்டியது இந்தியா.

4-ஆவது விக்கெட்டுக்கு 162: இதன்பிறகு ரஹானே 104 பந்துகளில் அரை சதமடிக்க, ரோஹித் சா்மா 208 பந்துகளில் 150 ரன்களை எட்டினாா். இந்திய அணி 73 ஓவா்களில் 248 ரன்கள் எடுத்திருந்தபோது ரோஹித் சா்மாவின் விக்கெட்டை இழந்தது. அவா் 231 பந்துகளில் 2 சிக்ஸா், 18 பவுண்டரிகளுடன் 161 ரன்கள் குவித்து ஜேக் லீச் பந்துவீச்சில் மொயீன் அலியிடம் கேட்ச் ஆனாா். ரோஹித்-ரஹானே ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 162 ரன்கள் குவித்தது.

இந்தியா-300/6: இதன்பிறகு விக்கெட் கீப்பா் ரிஷப் பந்த் களமிறங்க, மொயீன் அலி பந்துவீச்சில் போல்டு ஆனாா் அஜிங்க்ய ரஹானே. அவா் 149 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் குவித்தாா். இதன்பிறகு வந்த அஸ்வின் 13 ரன்களில் நடையைக் கட்ட, அக்ஸா் படேல் களம்புகுந்தாா். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 88 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்துள்ளது. ரிஷப் பந்த் 33, அக்ஸா் படேல் 5 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.

இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி, ஜேக் லீச் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனா். 2-ஆவது நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments