FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

லெஜண்ட்ஸ் லீக்: கங்குலி தலைமையில் இந்திய அணி அறிவிப்பு

மூத்த வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் போட்டி இந்த வருடம் கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்துடன் தொடங்கவுள்ளது. 

Updated On : 12 ஆகஸ்ட் 2022, 3:40 pm IST
பகிர்:

மூத்த வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் போட்டி இந்த வருடம் கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்துடன் தொடங்கவுள்ளது. 

இப்போட்டிக்காக கங்குலி தலைமையில் விளையாடும் இந்திய மஹாராஜாஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடப் போட்டி இந்தியாவின் 75-வது சுதந்திர தின நிறைவு விழாவுக்கான அர்ப்பணிப்பாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருட ஜனவரியில் ஓமனில் நடைபெற்ற முதல் பருவத்தில் லயன்ஸ் - ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிச்சுற்றில் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. 2-வது பருவத்தில்  4 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தமாக 15 ஆட்டங்கள். 

இந்திய மூத்த வீரர்களின் அணி இந்திய மஹாராஜாஸ் என்று அழைக்கப்படுகிறது. கங்குலி தலைமையிலான மஹாராஜாஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 16 அன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்திய மஹாராஜாஸ் - இயன் மார்கன் தலைமையிலான வேர்ல்டு ஜெயண்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன. 

Advertisement

Advertisement

கங்குலி தலைமையிலான இந்திய மஹாராஜாஸ் அணியில் சேவாக், யூசுப் பதான், இர்ஃபான் பதான், ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், அஜய் ஜடேஜா போன்ற பிரபலவீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்திய மஹாராஜாஸ் அணி

கங்குலி (கேப்டன்), சேவாக், முகமது கைஃப், யூசுஃப் பதான், பத்ரிநாத், இர்ஃபான் பதான், பார்தீவ் படேல் (விக்கெட் கீப்பர்), ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா (விக்கெட் கீப்பர்), அசோக் டிண்டா, பிரக்யான் ஓஹா, அஜய் ஜடேஜா, ஆர்பி சிங், ஜொகிந்தர் சர்மா, ரீதிந்தர் சிங் சோதி. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments