முகப்பு
செய்திகள்

செஸ் போட்டி: 2-வது சுற்றிலும் பிரக்ஞானந்தா வெற்றி

கார்ல்சனுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா. 

Updated On : 17 ஆகஸ்ட் 2022, 11:15 am IST
பகிர்:

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அடுத்ததாக அமெரிக்காவின் மியாமியில் நடைபெறும் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியில் விளையாடி வருகிறார் இந்தியாவின் பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தா.

முதல் சுற்றில் உலகின் நெ.1 ஜூனியர் வீரர் அலிரேஸா ஃபிரோஜாவை 2.5-1.5 என வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. 

2-வது சுற்றில் பிரபல வீரர் அனிஷ் கிரியை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. முதல் ஆட்டத்தில் தோல்வி பெறும் நிலையில் இருந்து தப்பித்து டிரா செய்தார் பிரக்ஞானந்தா. அடுத்த இரு ஆட்டங்களும் டிரா ஆயின. கடைசி ஆட்டத்தில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா 2.5-1.5 என்கிற புள்ளிக்கணக்கில் அனிஷ் கிரியை 2-வது சுற்றில் வீழ்த்தினார். 

Advertisement

Advertisement

8 வீரர்கள் விளையாடும் இந்தப் போட்டியில் கார்ல்சனுடன் இணைந்து முதல் இடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments