உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் பிரணாய் தோல்வி
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிரணாய் தோல்வியடைந்துள்ளார்.
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிரணாய் தோல்வியடைந்துள்ளார்.
இன்று நடைபெற்ற காலிறுதிச்சுற்றில் சீனாவின் ஜுன் பெங்கை எதிர்கொண்டார் பிரணாய். 21-19, 6-21, 18-21 என சீன வீரரிடம் கடுமையாகப் போராடி தோல்வியடைந்தார் பிரணாய். காயம் காரணமாக இன்று தன்னுடைய முழுத் திறமையை பிரணாயால் வெளிப்படுத்த முடியாமல் போனது.
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த இருமுறையும் பிரணாயால் பதக்கம் வெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருமுறையும் காலிறுதியில் தோல்வியடைந்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.