FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கே.எல். ராகுலுக்கு கரோனா: மே.இ. தீவுகள் தொடரில் விளையாடுவாரா?

பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 22 ஜூலை 2022, 1:47 pm IST
பகிர்:

பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் அவர் விளையாடுவாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக கே.எல். ராகுல் விலகினார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களிலும் அவர் பங்கேற்கவில்லை. கடந்த மாத இறுதியில், ஜெர்மனியில் தனக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக ட்விட்டரில் அவர் தகவல் தெரிவித்தார். 

பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் சிகிச்சை மேற்கொண்டு வந்த கே.எல். ராகுல், தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

Advertisement

Advertisement

உடற்தகுதியைக் கொண்டு மே.இ. தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் கே.எல். ராகுல் விளையாடுவார் என பிசிசிஐ அறிவித்திருந்தது. தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜூலை 29 முதல் தொடங்கும் டி20 தொடரில் கே.எல். ராகுல் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

இதையடுத்து ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கே.எல். ராகுல் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments