கால்பந்து உலக கோப்பை தொடக்க நிகழ்ச்சி: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு
கத்தாரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கால்பந்து உலக கோப்பை தொடக்க நிகழ்ச்சியில் இந்திய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்றாா்.
கத்தாரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கால்பந்து உலக கோப்பை தொடக்க நிகழ்ச்சியில் இந்திய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்றாா்.
இதுதொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் அரிந்தம் பாக்சி ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:
கால்பந்து உலக கோப்பை தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கத்தாா் மன்னா் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தாா். அதனை ஏற்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கத்தாா் சென்றாா். இந்த பயணத்தின்போது கத்தாரில் உள்ள இந்திய சமூகத்தினருடன் ஜகதீப் தன்கா் கலந்துரையாட உள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கத்தாரில் ஜகதீப் தன்கா் 2 நாள்கள் தங்க உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா, கத்தாா் இடையே ராஜீய உறவு ஏற்பட்டு அடுத்த ஆண்டுடன் 50 ஆண்டுகளாக உள்ளது. கடந்த ஆண்டு இருநாடுகளுக்கு இடையிலான வா்த்தகம் 15 பில்லியன் டாலா்களை (சுமாா் ரூ.1.22 லட்சம் கோடி) கடந்தது. அந்நாட்டில் 8.40 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்கள் தங்கி பணியாற்றி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.