முகப்பு
செய்திகள்

ஈரானை வீழ்த்தியது இங்கிலாந்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து 6-2 என்ற கோல் கணக்கில் ஈரானை அசத்தலாக திங்கள்கிழமை வென்றது. 

Updated On : 22 நவம்பர் 2022, 5:57 am IST
பகிர்:

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து 6-2 என்ற கோல் கணக்கில் ஈரானை அசத்தலாக திங்கள்கிழமை வென்றது. 

தோஹாவில் உள்ள காலிஃபா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் கோல் வாய்ப்பு இங்கிலாந்துக்கு கிடைத்தது. ஆட்டத்தின் 35-ஆவது நிமிஷத்தில் தன் வசம் இருந்த பந்தை இங்கிலாந்தின் லூக் ஷா, பாக்ஸýக்குள்ளாக எதிரணி வீரர்கள் மையமிடாமல் இருந்த ஜூட் பெலிங்கமிடம் கிராஸ் செய்தார். ஜூட் அதை, ஈரான் கோல்கீப்பரிடம் சிக்காமல் கோல் போஸ்ட்டுக்குள் தள்ளினார். 

தொடர்ந்து 43-ஆவது நிமிஷத்தில் மாகிர் உதவியுடன் புகாயோ சகா அடித்த கோலால் இங்கிலாந்து 2-0 என முன்னேறியது. அடுத்ததாக ஹாரி கேன் கிராஸ் வழங்கிய பந்தை ரஹிம் ஸ்டெர்லிங் ஸ்கோர் (45+1) செய்ய, முதல் பாதி முடிவில் இங்கிலாந்து 3-0 என முன்னிலையில் இருந்தது. 

Advertisement

Advertisement

பின்னர் தொடர்ந்த ஆட்டத்தின் 62-ஆவது நிமிஷத்தில் புகாயோ சகா ரஹிம் ஸ்டெர்லிங் உதவியுடன் தனது 2-ஆவது கோலை பதிவு செய்தார். ஒருவழியாக, ஆட்டத்தின் 65-ஆவது நிமிஷத்தில் முதல் கோல் அடித்தது ஈரான். இங்கிலாந்து தடுப்பாட்டத்தைக் கடந்து சக வீரர் கோலியாத் பாஸ் செய்த பந்தை அருமையாக கோல் போஸ்ட்டுக்குள் தள்ளினார் மெஹதி தரேமி. 

ஆனால் விட்டுக்கொடுக்காத இங்கிலாந்து 71-ஆவது நிமிஷத்தில், ஹாரி கேன் உதவியுடன் மார்கஸ் ராஷ்ஃபோர்டு அடித்த கோலால் 5-1 என முன்னேறியது. அந்த அணியின் ஜேக் கிரேலிஷ் 90-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, அணியின் கோல் எண்ணிக்கை 6 ஆனது. இறுதியாக, ஈரானுக்கு (90+12) கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை தவறவிடாமல் மெஹதி தரேமி கோலடிக்க, ஆட்டம் 6-2 என்ற கோல் கணக்கில் நிறைவடைந்தது. 

வெற்றி: 3-ஆவது ஆட்டத்தில் நெதர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் செனகலை வீழ்த்தியது. நெதர்லாந்துக்காக கோடி காப்கோ (84'), டேவி கிளாசென் (90+9') ஆகியோர் கோலடித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments