FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சையத் முஷ்டாக் அலி போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் எப்படி விளையாடுகிறார்?

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் கோவா அணிக்காக விளையாடி வருகிறார் அர்ஜுன் டெண்டுல்கர்.

Updated On : 12 அக்டோபர் 2022, 4:51 pm IST
பகிர்:

சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் கோவா அணிக்காக விளையாடி வருகிறார் அர்ஜுன் டெண்டுல்கர்.

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகனும் இடது கை வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜுன் டெண்டுல்கர், 2021-ம் வருடம் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான மும்பை அணியில் இடம்பெற்றார். அர்ஜுன் விளையாடிய இரு ஆட்டங்களிலும் மும்பை அணிக்குத் தோல்வியே கிடைத்தன. ஹரியாணாவுக்கு எதிராக 1/34, புதுச்சேரிக்கு எதிராக 1/33 என சுமாராகவே பந்துவீசினார். இதன்பிறகு ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, அர்ஜுனை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியில் ஈடுபட்டபோது அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஓர் ஆட்டத்திலும் விளையாட முடியாமல் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார். இந்திய அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராகப் பணியாற்றியுள்ள அர்ஜுன், இந்திய யு-19 அணிக்காகவும் விளையாடியுள்ளார். 

கடந்த வருடம் மும்பை ரஞ்சி அணியிலும் இடம்பிடித்தார். 2022 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 30 லட்சத்துக்கு அர்ஜுனை மீண்டும் தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இதன்பிறகு மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்கு மாறினார் அர்ஜுன். மும்பை அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் அணி மாறினார்.

Advertisement

Advertisement

இந்நிலையில் நேற்று முதல் தொடங்கியுள்ள சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் கோவா அணிக்காக விளையாடி வரும் 23 வயது அர்ஜுன் டெண்டுல்கர், முதல் இரு ஆட்டங்களிலும் நன்றாகப் பந்துவீசியுள்ளார். திரிபுராவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 3 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 20 ரன்கள் கொடுத்தார். இன்று மணிப்பூருக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். இரு ஆட்டங்களிலும் கோவா வெற்றி பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments