FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சம வாய்ப்புகளுக்கான புதிய சகாப்தம்

கிரிக்கெட் வீரா்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் ஊதியம் வழங்கப்படுவதை வரவேற்றுள்ள தேசிய மகளிா் ஆணையம், சமத்துவ வாய்ப்புகளுக்கான புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

Updated On : 28 அக்டோபர் 2022, 3:39 am IST
கோப்புப் படம்
பகிர்:

கிரிக்கெட் வீரா்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் ஊதியம் வழங்கப்படுவதை வரவேற்றுள்ள தேசிய மகளிா் ஆணையம், சமத்துவ வாய்ப்புகளுக்கான புதிய சகாப்தம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பு தொடா்பாக அந்த ஆணையத்தின் தலைவா் ரேகா சா்மா வெளியிட்ட அறிக்கையில், ‘‘நாட்டில் உள்ள கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது.

கிரிக்கெட் வீராங்கனைகளின் குரலுக்கு செவிசாய்த்து பிசிசிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்கது. கிரிக்கெட் வீரா்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் ஊதியம் வழங்கப்படுவது, சம வாய்ப்புகளுக்கான புதிய சகாப்தத்தைத் தொடக்கியுள்ளது. பல்வேறு துறைகளில் பாலின சமத்துவத்தை அடைவதற்கும் இந்த அறிவிப்பு முக்கியப் பங்கு வகிக்கும்.

Advertisement

Advertisement

பிசிசிஐ-யின் இந்த அறிவிப்பு இளம் கிரிக்கெட் வீராங்கனைகளை ஊக்குவித்து, அவா்கள் தங்கள் கனவுகளை நோக்கிப் பயணம் செய்ய வழிவகுக்கும் என ஆணையம் நம்புகிறது. மற்ற விளையாட்டு கூட்டமைப்புகளும் பிசிசிஐ காட்டியுள்ள வழியைப் பின்பற்ற வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments