FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

துபை ஓபன் செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி, அர்ஜுன் முன்னிலை!

6-வது சுற்றில் சக இந்திய வீரர் ஷர்துல் காகரேவை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.

Updated On : 2 செப்டம்பர் 2022, 12:06 pm IST
பகிர்:

துபை ஓபன் செஸ் போட்டியில் 6-வது சுற்றின் முடிவில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா 6-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

22-வது துபை ஓபன் செஸ் போட்டி மூன்று வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது.

இந்த வருடப் போட்டியில் 171 வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள். பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட 78 இந்திய வீரர்கள் இப்போட்டியில் விளையாடுகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற கிரிப்டோ கோப்பைப் போட்டியில் பிரக்ஞானந்தா 2-வது இடம் பெற்றார். துபை ஓபன் செஸ் போட்டி செப்டம்பர் 5 அன்று நிறைவுபெறுகிறது.

Advertisement

Advertisement

துபை ஓபன் செஸ் போட்டியில் முதல் 4 சுற்றுகள் வரை முன்னணியில் இருந்த பிரக்ஞானந்தா, 5-வது சுற்றில் தோற்றதால் பின்தங்கினார். இந்நிலையில் 6-வது சுற்றில் சக இந்திய வீரர் ஷர்துல் காகரேவை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. இதனால் தற்போது 5 புள்ளிகளைக் கொண்டு புள்ளிகள் பட்டியலில் 4 வீரர்களுடன் இணைந்து 2-ம் இடத்தில் உள்ளார். சமீபகாலமாகச் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி, இப்போட்டியில் முதலிடத்தில் இருந்த ரினட்டை 6-வது சுற்றில் வீழ்த்தினார். இதனால் தற்போது 5.5 புள்ளிகளுடன் ரஷியாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டருடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார் அர்ஜுன் எரிகைசி.

துபை ஓபன் செஸ்: பிரக்ஞானந்தா விளையாடிய ஆட்டம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments