FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சையத் முஷ்டாக் டி20: தமிழக அணி அறிவிப்பு, கேப்டன் நீக்கம்!

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 15 செப்டம்பர் 2022, 2:38 pm IST
பகிர்:

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

2022 சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டி அக்டோபர் 11 முதல் தொடங்குகிறது. இப்போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணியின் கேப்டனாக இருந்த விஜய் சங்கர் இம்முறை நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக பாபா அபரஜித் கேப்டனாக  நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஏற்பட்ட காயத்தால் முழு உடற்தகுதியை இன்னும் அடையாமல் உள்ளார் விஜய் சங்கர். இதன் காரணமாக அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வாஷிங்டன் சுந்தர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் நடராஜனும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆச்சர்யம் தரும் விதமாக 6 சர்வதேச டி20, 42 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள 31 வயது வருண் சக்ரவர்த்தி முதல்முறையாகத் தமிழக அணிக்காக விளையாடவுள்ளார். 

எலைட் ஈ பிரிவில் உள்ள தமிழக அணி தனது ஆட்டங்களை லக்னெளவில் விளையாடுகிறது. அக்டோபர் 11 அன்று சத்தீஸ்கர் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இதன்பிறகு ஒடிஷா, சிக்கிம், பெங்கால், ஜார்க்கண்ட், சண்டீகர் ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடுகிறது. 

Advertisement

Advertisement

தமிழ்நாடு

பாபா அபரஜித் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், நடராஜன், ஷாருக் கான், சாய் கிஷோர், சஞ்சய் யாதவ், சந்தீப் வாரியர், எம். சித்தார்த், வருண் சக்ரவர்த்தி, ஜே. சுரேஷ் குமார், ஹரி நிஷாந்த், ஆர். சிலம்பரசன், எம். அஸ்வின், அஜிதேஷ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments