ஜூனியர் உலக சாம்பியன் ஆன தமிழகத்தின் 12 வயது இளம்பரிதி
11 ஆட்டங்களில் 9.5 புள்ளிகளை அவர் எடுத்து வெற்றி பெற்றார்.
உலக இளையோர் செஸ் போட்டிகளில் இரு இந்திய வீரர்கள் சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்கள்.
இந்தியாவின் 76-வது செஸ் கிராண்ட்மாஸ்டரான 15 வயது பிரணவ் ஆனந்த், உலக யு-16 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கர்நாடகத்தைச் சேர்ந்த பிரணவ் ஆனந்த், வேர்ல்ட் யூத் 2022 போட்டியில் 11 ஆட்டங்களில் 9 புள்ளிகளை எடுத்தார். அதேபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது இளம்பரிதி யு-14 உலக சாம்பியன் ஆகியுள்ளார். 11 ஆட்டங்களில் 9.5 புள்ளிகளை அவர் எடுத்து வெற்றி பெற்றார். இளம் வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இளம்பரிதிக்குப் பிரபல செஸ் வீரர் அனிஷ் கிரி, ரூ. 2 லட்சம் வழங்கியுள்ளார்.
Related Article
இந்திய ஏ அணி: புறக்கணிக்கப்பட்ட தமிழக வீரர்கள்!
Advertisement
Advertisement
கவுன்டி கிரிக்கெட்: உமேஷ் யாதவ் விலகல்!
டி20 உலகக் கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.