முகப்பு
செய்திகள்

விடியோ: கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கோலி & ரோஹித் சர்மா!

ஓய்வறையின் அருகே படிக்கட்டில் அமர்ந்திருந்த கோலியும் ரோஹித் சர்மாவும் கட்டிப்பிடித்து...

Updated On : 26 செப்டம்பர் 2022, 3:11 pm IST
பகிர்:

டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியதையடுத்து கோலியும் ரோஹித் சர்மாவும் வெற்றியைக் கொண்டாடிய விடியோ வெளியாகியுள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற கடைசி டி20 ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. கேம்ரூன் கிரீன் 52, டிம் டேவிட் 54 ரன்கள் எடுத்தார்கள். அக்‌ஷர் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று தொடரை வென்றது. கோலி 63, சூர்யகுமார் யாதவ் 69 ரன்கள் எடுத்தார்கள். ஆட்ட நாயகனாக சூர்யகுமார் யாதவும் தொடர் நாயகனாக அக்‌ஷர் படேலும் தேர்வானார்கள்.

இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு ஓய்வறையின் அருகே படிக்கட்டில் அமர்ந்திருந்த கோலியும் ரோஹித் சர்மாவும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள். இதன் காணொளி வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments