செய்திகள்

பந்துவீச்சில் அசத்திய பதிரானா: 164 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்!

ஆசியக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

DIN

ஆசியக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆசியக் கோப்பை தொடரின் இன்றையப் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது நயீம் மற்றும் தன்சித் ஹாசன் களமிறங்கினர். தன்சித் ஹாசன் 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின், நஜ்முல் ஹொசைன் களமிறங்கினார். முகமது நயீம் 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. களமிறங்கியது முதலே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய நஜ்முல் ஹொசைன் அணிக்காக ஓரளவு ரன்களை சேர்த்தார். அவர் 122 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். 

42.4 ஓவர்களில் வங்கதேசம் 164 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 127 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த வங்கதேச அணி 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 37 ரன்களுக்கு வங்கதேசம் 6 விக்கெட்டுகளை இழந்தது.  

இலங்கை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பதிரானா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மஹீஷ் தீக்‌ஷனா 2 விக்கெட்டுகளையும், தனஞ்ஜெயா டி சில்வா, துனித் வெல்லாலகே மற்றும் தாசுன் ஷானகா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். 

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்குகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT