ரஞ்சி கோப்பை: சௌராஷ்டிரம் அணி சாம்பியன்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெங்காலுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் சௌராஷ்டிரம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பெங்கால் 174 ரன்களும், சௌராஷ்டிரம் அணி 404 ரன்களும் எடுத்தது.
2வது இன்னிங்ஸில் பெங்கால் 214 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. பெங்கால் அணியில் அதிகபட்சமாக மஜூம்ப்தார் 61 ரன்களும், கேப்டன் மனோஜ் திவாரி 68 ரன்களும் எடுத்தனர்.
2வது சௌராஷ்டிரா அணியின் கேப்டன் உனத்கட் 6 விக்கெட்டுகளையும் சேத்தன் சக்காரியா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஜடேஜா அபாரம்: ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்த 9 ஆஸி. பேட்டர்கள்!
அடுத்து 12 ரன்கள் இலக்குடன் விளையாடிய சௌராஷ்டிரா அணி 2.4 ஓவரில் 14 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்ஸில் 81 ரன்கள் எடுத்த அர்பித் வஸவதா தொடர் நாயகனா தேர்வு செய்யப்பட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.