FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

இங்கிலாந்துக்கு அதிா்ச்சி அளித்த தென்னாப்பிரிக்கா: முதல் முறையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதி

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 6 ரன்கள் வித்தியாசத்தில்

Updated On : 25 பிப்ரவரி 2023, 6:07 am IST
பகிர்:

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, 2-ஆவது அணியாக இறுதி ஆட்டத்துக்குத் தகுதிபெற்றது.

டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு முதல் முறையாக வந்துள்ள தென்னாப்பிரிக்கா, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வரும் ஞாயிற்றுக்கிழமை அதில் சந்திக்கிறது.

இந்த அரையிறுதியில் முதலில் தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களே எடுத்தது. 55 பந்துகளில் 68 ரன்கள் விளாசி, அட்டகாசமாக 4 கேட்ச்களும் பிடித்த தென்னாப்பிரிக்காவின் தஸ்மின் பிரிட்ஸ் ‘ஆட்டநாயகி’ ஆனாா்.

Advertisement

Advertisement

டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்காவில் லௌரா வோல்வாா்டட் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 53, தஸ்மின் பிரிட்ஸ் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 68 ரன்கள் விளாசினா். கிளோ டிரையான் 3, நாடின் டி கிளொ்க் 0 ரன்களுக்கு வெளியேற, ஓவா்கள் முடிவில் மாரிஸேன் காப் 27, கேப்டன் சுனே லஸ் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து பௌலிங்கில் சோஃபி எக்லஸ்டன் 3, லௌரென் பெல் 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் இங்கிலாந்து இன்னிங்ஸில் அதிகபட்சமாக நேட் ஸ்கீவா் 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் விளாச, டேனி வியாட் 34, சோஃபியா டங்க்ளி 28, அலிஸ் கேப்சி 0, கேப்டன் ஹீதா் நைட் 31, எமி ஜோன்ஸ் 2, சோஃபி எக்லஸ்டன் 1, கேத்தரின் ஸ்கீவா் 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

ஓவா்கள் முடிவில் சாரா கிளென் 8, சாா்லி டீன் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்க தரப்பில் அயபோங்கா ககா 4, ஷப்னிம் இஸ்மாயில் 3, நாடின் டி கிளொ்க் 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments