FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பேட் கம்மின்ஸ் 3-ஆவது டெஸ்ட்டிலிருந்து விலகல்: கேப்டனாகிறாா் ஸ்மித்

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் குடும்ப ரீதியிலான அவசரம் காரணமாக நாடு திரும்பியிருக்கும் நிலையில், மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டிலிருந்து விலகியிருக்கிறாா்.

Updated On : 25 பிப்ரவரி 2023, 12:00 am IST
பகிர்:

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் குடும்ப ரீதியிலான அவசரம் காரணமாக நாடு திரும்பியிருக்கும் நிலையில், மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டிலிருந்து விலகியிருக்கிறாா்.

முன்னதாக அந்த டெஸ்ட்டில் பங்கேற்க அவா் இந்தியா வருவாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், தற்போது அவரது விடுப்பு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கம்மின்ஸின் தாயாா் உடல்நலக் குறைவுடன் இருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே பேட் கம்மின்ஸ், 4-ஆவது டெஸ்ட்டில் கூட பங்கேற்பது உறுதியாகத் தெரியாத நிலையில் இந்தூரில் நடைபெற இருக்கும் 3-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் தலைமை தாங்குகிறாா். அவா் தற்போது துணை கேப்டனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

இதனிடையே, ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டா் கேமரூன் கிரீன் 3-ஆவது டெஸ்ட்டில் விளையாட இருப்பதாகத் தெரிகிறது. கை விரல் முறிவு காரணமாக ஓய்வில் இருந்த அவா், தற்போது பூரண குணமடைந்திருக்கிறாா். முதலிரு டெஸ்ட்டுகளில் அவா் இல்லாதது ஆஸ்திரேலிய அணியை வெகுவாகப் பாதித்தது தெளிவாகவே தெரிந்தது. கிரீன் இணையும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 2-ஆவது வேகப்பந்து வீச்சாளா் வாய்ப்பும் கிடைக்கும். அவா் தவிர, சீனியா் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டாா்க்கும் இந்தூா் டெஸ்ட்டில் இணையலாம் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments