FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஜிம்பாப்வே டி20 அணியில் இங்கிலாந்து வீரர்!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள ஜிம்பாப்வே அணியில் இங்கிலாந்து முன்னாள் வீரரான கேரி பேலன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

Updated On : 4 ஜனவரி 2023, 5:32 pm IST
பகிர்:

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள ஜிம்பாப்வே அணியில் இங்கிலாந்து முன்னாள் வீரரான கேரி பேலன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே நாட்டில் பிறந்த கேரி பேலன்ஸ், 2013 முதல் 2017 வரை இங்கிலாந்து அணிக்காக 23 டெஸ்டுகள், 16 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடினார். சிறுவயது முதல் இங்கிலாந்தில் வாழ்ந்ததால் அங்கேயே கிரிக்கெட்டைப் பயின்று பிறகு இங்கிலாந்து அணியிலும் இடம்பிடித்தார். (எனினும் 2006 யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடினார். ) 

கவுன்டி கிரிக்கெட்டில் நிறவெறி தொடர்பான சர்ச்சையில் சிக்கியதால் தற்போது ஜிம்பாவே அணிக்காக விளையாட முடிவெடுத்துள்ளார் பேலன்ஸ். ஐசிசி விதிமுறைகளின்படி வெவ்வேறு நாடுகளின் அணிகளில் ஒரு வீரர் இடம்பெறுவதற்கு மூன்று வருட இடைவெளி இருக்க வேண்டும். அதன்படி தற்போது ஜிம்பாப்வே அணியில் இடம்பிடித்துள்ளார். ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துடனான இரு வருட ஒப்பந்தத்தில் 33 வயது பேலன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஐஎல்டி20 போட்டியில் விளையாடுவதால் ஜிம்பாப்வே அணியில் சிகந்தர் ராஸா இடம்பெறவில்லை. 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments