முகப்பு
செய்திகள்

இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: ஆப்கானிஸ்தானுக்கு 324 ரன்கள் இலக்கு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 323 ரன்கள் குவித்துள்ளது.

Updated On : 4 ஜூன் 2023, 3:01 pm IST
கோப்புப்படம்
பகிர்:

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 323 ரன்கள் குவித்துள்ளது.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி மகிந்த ராஜபட்ச சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் திமுத் கருணாரத்னே களமிறங்கினர். இந்த இணை சிறப்பாக தொடக்கத்தைத் தந்தது. பதும் நிசங்கா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், குஷல் மெண்டிஸ் களமிறங்கினார். அவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை அணியின் ஸ்கோர் அதிகரித்தது. சிறப்பாக விளையாடிய திமுத் கருணாரத்னே மற்றும் குஷல் மெண்டிஸ் அரைசதம் கடந்தனர். கருணாரத்னே 52 ரன்களிலும், குஷல் மெண்டிஸ் 78 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய சதீரா (44 ரன்கள்), அசலங்கா (6 ரன்கள்), தாசுன் ஷானகா (23 ரன்கள்) மற்றும் தனஞ்ஜெயா டி சில்வா ( 29 ரன்கள்) குவித்தனர். 

ஆப்கானிஸ்தான் சார்பில் ஃபரீத் அகமது மற்றும் முகமது நபி தலா 2 விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 323 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments