நாங்கள் முட்டாள்கள் இல்லை; இதனால்தான் சர்ஃபராஸ் கானை தேர்வு செய்யவில்லை: பிசிசிஐ தரப்பில் விளக்கம்!
மேற்கிந்திய தீவுகள் அணி தொடருக்கான இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கானை தேர்வு செய்யாதது குறித்து பிசிசிஐ தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியுற்றது. இந்திய பேட்டர்கள் சரியாக விளையாடாததே காரணம். மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான டெஸ்ட் போட்டிக்கு இந்திய வீரர்கள் பட்டியல் வெளியானது. இதில் புஜாரா இல்லை. ஜெய்ஸ்வால், ருதுராஜ் இடம் பெற்றிருந்தார்கள்.
மேற்கிந்தியத் தீவுகளுடனான தொடா்கள், வரும் ஜூலை 12-ஆம் தேதி தொடங்குகிறது.
Advertisement
சர்ஃபராஸ் கான் 2021-22 ரஞ்சிக் கோப்பையில் 982 ரன்கள் எடுத்திருந்தார். 2023இல் 9 இன்னிங்ஸில் 556 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார். முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தேர்வுக் குழுவினை சரமாரியாக கேள்வி எழ இருந்தார். இந்நிலையில் பிசிசிஐ தரப்பில் இருந்து கூறியதாவது:
வெற்றியில் கோபமான கொண்டாட்டத்தை புரிந்துக் கொள்ள முடிகிறது. இருப்பினும் எல்லாவற்றிற்கும் ஒரு அளவு இருக்கிறது. அவரது செயல்களால்தான் அவரை பலமுறை தேர்வவு செய்யாமல் இருப்பதற்கான காரணமாக அமைகிறது. அவரை தேர்வு செய்யாதத்திற்கு பல காரணங்கள் உள்ளது. ரஞ்சிக் கோப்பையில் 900 ரன்கள் எடுத்தவரை தேர்வு செய்யாமல் இருக்க நாங்கள் ஒன்றும் முட்டாளில்லை. அவரது உடல்தகுதியும் சர்வதேச தரத்தில் இல்லை.