மீண்டும் கேன் வில்லியம்சனுக்கு காயம்!
உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார் கேன் வில்லியம்சன்.
கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணி பீல்டிங்கின் போது சிஎஸ்கே அணி வீரர் ருதுராஜ் அடித்த பந்தினை பவுண்டரி லைனில் தடுக்க பாய்ந்து குதித்தபோது கால்கள் மடங்கி கீழே விழுந்தார். சிக்ஸரை தடுத்து பவுண்டரியாக மாற்றினார். ஆனால் கீழே விழுந்த வில்லியம்சன் எழ முடியவில்லை. இந்த காயம் காரணத்தினால் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார்.
இதனால் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலும் விளையாட முடியுமா என கேள்வி எழுந்தது. பின்னர் கடின உழைப்புக்குப் பிறகு நியூசிலாந்தின் 3வது போட்டியில் களமிறங்கினார்.
Advertisement
Advertisement
வில்லியம்சன் 78 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். ரன் ஓடும்போது ஃபீல்டிங்கில் இருந்து பந்தினை வீசும்போது அது வில்லியம்சனின் கையில் பட்டது. இருந்தும் சிறிது நேரம் அனிக்காக விளையாடினார். பின்னர் குறைவான ரன்களே தேவைப்பட்டபோது ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
இதையும் படிக்க: இது ஆரம்பம் மட்டுமே முடிவு அல்ல: ஆஸி.யின் அடுத்தடுத்த தோல்வி குறித்து லபுஷேன் அதிரடி!
50 ஓவர்களின் முடிவில் வங்கதேசம் 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி 42.5 பந்துகளில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
“பெரிய காயமில்லை; காலையில் ஸ்கேன் செய்து பார்க்கப்படும்” என வில்லியம்சன் போட்டி முடிந்தப்பிற்கு பேட்டியளித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.