FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

டெஸ்ட் போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் புதிய சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Updated On : 29 ஜூலை 2024, 7:19 pm IST
பென் ஸ்டோக்ஸ் - படம் | AP
பகிர்:

டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக அரைசதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இங்கிலாந்து அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது.

அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 28 பந்துகளில் 57 ரன்கள் (9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள்) எடுத்தும், பென் டக்கெட் 16 பந்துகளில் 25 ரன்கள் (4 பவுண்டரிகள்) எடுத்தும் களத்தில் இருந்தனர்.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 24 பந்துகளில் அரைசதம் எடுத்து அசத்தினார். இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக அரைசதம் எடுத்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

மேலும், ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் எடுத்து 3-வது இடத்திலிருக்கும் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாக் காலிஸின் சாதனையையும் பென் ஸ்டோக்ஸ் சமன் செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மிஸ்பா உல் ஹக் முதலிடத்தில் உள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்தவர்கள்

மிஸ்பா உல் ஹக் (பாகிஸ்தான்) - 21 பந்துகளில்

டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) - 23 பந்துகளில்

பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) - 24 பந்துகளில்

ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) - 24 பந்துகளில்

ஷேன் ஷில்லிங்ஃபோர்டு (மே.இ.தீவுகள்) - 25 பந்துகளில்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments