முகப்பு
செய்திகள்

100வது டெஸ்ட்டில் அஸ்வின் புதிய சாதனை!

தமிழக வீரர் ரவிசந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டியில் கலக்கி வருகிறார்.

Updated On : 9 மார்ச் 2024, 1:03 pm IST
ரவிசந்திரன் அஸ்வின் - Ashwini Bhatia
பகிர்:

தமிழக வீரர் ரவிசந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டியில் கலக்கி வருகிறார்.

இந்தியா - இங்கிலாந்து மோதும் டெஸ்ட் தொடரின் 5-ஆவது ஆட்டம், இந்திய ஸ்பின்னா் ரவிச்சந்திரன் அஸ்வின், இங்கிலாந்து பேட்டா் ஜானி போ்ஸ்டோவுக்கு 100-ஆவது டெஸ்ட் ஆட்டமாக அமைகிறது.

இந்த இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் இத்துடன் 4 ஆட்டங்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில், இந்தியா 3-1 என தொடரைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. கடைசி ஆட்டம் தா்மசாலாவில் மாா்ச் 7 தொடங்கியது.

Advertisement

Advertisement

இதில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 218க்கு ஆல் அவுட். இந்தியா 477. 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 145/8 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் எடுத்த அஸ்வின் 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட் எடுத்து அசத்தி வருகிறார். இத்துடன் 36ஆவது முறையாக அஸ்வின் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

இந்தியாவில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் எடுத்தவர் வரிசையில் முதலிடம் பிடித்துள்ள அஸ்வின், உலக அளவில் ஆர்ஜெ ஆர்ட்லியுடன்(36) 3ஆம் இடத்தில் இருக்கிறார்.

முதலிடத்தில் முரளிதரன் (67 ), 2ஆம் இடத்தில் ஷேன் வார்னே (37) இருக்கிறார்கள். இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி விளையாடினால் அஸ்வின் வார்னேவின் இடத்தினைப் பிடிக்க அதிகம் வாய்ப்புள்ளது.

100வது டெஸ்ட் போட்டியில் (4+5) 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருப்பது மறக்க முடியாத ஒன்றாக இருப்பதாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை 13ஆவது முறையாக வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments