முகப்பு
செய்திகள்

100-வது டெஸ்ட்டில் கேன் வில்லியம்சன் அரைசதம்; நியூசி. 40 ரன்கள் முன்னிலை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து 40 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Updated On : 9 மார்ச் 2024, 4:01 pm IST
கேன் வில்லியம்சன்
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து 40 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (மார்ச் 8) கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது. நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டாம் லாதம் 38 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஸ் ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் மற்றும் கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா 256 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லபுஷேன் 90 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும். நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் டிம் சௌதி, பென் சியர்ஸ் மற்றும் கிளன் பிளிப்ஸ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

Advertisement

Advertisement

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. 100-வது போட்டியில் விளையாடும் கேன் வில்லியம்சன் அரைசதம் எடுத்தார். அவர் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். டாம் லாதம் 65 ரன்களுடனும், ரச்சின் ரவீந்திரா 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 40 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments