FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அலெக்ஸ் கேரி, மிட்செல் மார்ஷ் அதிரடி; டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.

Updated On : 11 மார்ச் 2024, 4:33 pm IST
கோப்பையுடன் போஸ் கொடுக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள்
பகிர்:

அலெக்ஸ் கேரி மற்றும் மிட்செல் மார்ஷின் அதிரடியான ஆட்டத்தால் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு எதிரான தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட்17 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நான்காம் நாளான இன்று ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே டிராவிஸ் ஹெட் 18 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஆஸ்திரேலிய அணி 80 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனையடுத்து, மிட்செல் மார்ஷ் மற்றும் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அபாரமாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. இவர்கள் இருவரும் இணைந்து 140 ரன்கள் சேர்த்தனர். மிட்செல் மார்ஷ் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

Advertisement

Advertisement

அதன்பின் களமிறங்கிய பாட் கம்மின்ஸ் தனது பங்குக்கு 32 ரன்கள் சேர்த்தார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. அலெக்ஸ் கேரி 98 ரன்களுடனும், பாட் கம்மின்ஸ் 32 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் பென் சியர்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மாட் ஹென்றி 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா முழுவதுமாக கைப்பற்றியது. அலெக்ஸ் கேரி ஆட்டநாயகனாகவும், மாட் ஹென்றி தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments