ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் ஷமர் ஜோசப்: எந்த அணியில் தெரியுமா?
மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷமர் ஜோசப் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக விளையாடவுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷமர் ஜோசப் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக விளையாடவுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி அண்மையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் தனது அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகளின் இளம் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஷமர் ஜோசப் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையும் படிக்க: 12-வது முறையாக அடிக்கப்பட்ட இரட்டை சதம்; ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள்!
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் ஷமர் ஜோசப் முதல் முறையாக விளையாடவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஷமர் ஜோசப்பை ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட்டுக்குப் பதிலாக ஷமர் ஜோசப் லக்னௌ அணியில் இணைந்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தேர்வு செய்வதில் ஷமர் ஜோசப் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக அண்மையில் மேற்கிந்தியத் தீவுகளின் பயிற்சியாளர் டேரன் சம்மி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.